அஜந்தா.. இசைஞானி இளையராஜா இசையில் நான்கு மொழிகளில் உருவாகியுள்ள படம் இது.
சிறந்த இசைக்கான விருதினைக் கூட தமிழக அரசு இந்தப் படத்துக்குத்தான் வழங்கியுள்ளது. ஆனாலும் இன்னும் ரிலீசாகவில்லை.
இப்போது படத்தை வெளியிடும் தீவிர முயற்சியில் உள்ளார் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்பாரவிசங்கர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பிரஸ்மீட் எம்எம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ரவிசங்கர் கூறுகையி்ல், படம் வெளியாகும் முன்பே இதற்கொரு கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது இசைஞானியின் இசை.
இனிமேல் நான் தயாரிக்கப் போகும் எல்லா படத்திலும் இளையராஜாதான் இசையமைப்பார். ஒருவேளை முடியலேன்னு சொல்லிட்டா... நானே இசையமைக்கப் போறேன். எல்லாரையும் விட எனக்கு மூளை கொஞ்சம் அதிகம்.
இந்தப் படத்தை வெளியிடுவதில் சில காரணங்களால் தாமதமாகிடுச்சி. அப்பவே பண்ணி ஒரு முப்பது கோடி கலெக்ட் பண்ணியிருக்கும், என்றார் கொஞ்சமும் சிரிக்காமல்.
இன்னொன்று, இந்த படத்தை ரஜினி படத்துக்குப் போட்டியா ரிலீஸ் பண்ண நினைச்சாராம் ராஜ்பா.. அப்பப்பா
Post a Comment