மலையாளத்தில் வெளிவந்த 'டிராபிக்' படத்தை தமிழில், ரீமேக் செய்கிறார் ராதிகா சரத்குமார். இது பற்றி ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது: மலையாள 'டிராபிக்' படத்தை பார்த்து பிரமித்து போனேன். இப்படியெல்லாம் கூட திரைக்கதை அமைக்க முடியுமா? என்று ஆச்சர்யமாக இருந்தது. இதை தமிழில் தயாரிக்க முடிவு செய்தேன். மலையாள டிராபிக்கை தயாரித்த மேஜிக் சினிமாவின் லிஸ்டின் ஸ்டீபனுடன் எனது ஐ பிக்சர்சும் இணைந்து இதை 'சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் தயாரித்துள்ளோம்.
'டிராபிக்' இயக்குனர் இப்போது இந்தியில் பிசியாக இருப்பதால் அவரது உதவியாளர் ஷகித் காதர் இயக்கி உள்ளார். நான், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சேரன், பிரசன்னா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளோம். உடல் உறுப்பு தானம், போக்குவரத்து நெரிசலில் எதிர்கொள்ள வேண்டிய சவால் என்ற இரண்டு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை படம் ஏற்படுத்தும்.
அதோடு ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஏதாவது சிறு தவறு செய்திருப்போம். அதற்கு பரிகாரம் செய்ய வாய்ப்பும் வரும் என்பதையும், ஒருவரின் சிறிய விட்டுக் கொடுத்தல் இன்னொருவருக்கு பெரிய வாழ்வை கொடுக்கும் என்பது போன்ற உணர்வு பூர்வமான விஷயத்தையும் சொல்கிறோம். இன்றைய காலகட்டத்துக்கு தேவையான படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
'டிராபிக்' இயக்குனர் இப்போது இந்தியில் பிசியாக இருப்பதால் அவரது உதவியாளர் ஷகித் காதர் இயக்கி உள்ளார். நான், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சேரன், பிரசன்னா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளோம். உடல் உறுப்பு தானம், போக்குவரத்து நெரிசலில் எதிர்கொள்ள வேண்டிய சவால் என்ற இரண்டு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை படம் ஏற்படுத்தும்.
அதோடு ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஏதாவது சிறு தவறு செய்திருப்போம். அதற்கு பரிகாரம் செய்ய வாய்ப்பும் வரும் என்பதையும், ஒருவரின் சிறிய விட்டுக் கொடுத்தல் இன்னொருவருக்கு பெரிய வாழ்வை கொடுக்கும் என்பது போன்ற உணர்வு பூர்வமான விஷயத்தையும் சொல்கிறோம். இன்றைய காலகட்டத்துக்கு தேவையான படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
Post a Comment