கேப்டன் விஜயகாந்த் முழுவேலையாக அரசியல் புகுந்துவிட்டார். இனி சினிமாவில் நடிப்பது சந்தேகம் தான். இதனையடுத்து, அவரது மகன் ஷண்முக பாண்டியனை விரைவில் அறிமுகம் செய்யகிறார் விஜயகாந்த். பல நாட்களாக இந்த பேச்சு கோலிவுட் பக்கம் கசிந்தது. தற்போது இந்த செய்தி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சமீபத்தில் ஒரு புதுமுக கதை கேட்ட கேப்டன் விஜயகாந்த், ஓகே என்று சொல்லிவிட்டாராம். மேலும் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கேப்டன். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
Post a Comment