பிரபல இந்திப் பட இயக்குநர் யாஷ் சோப்ரா தனது நீண்ட திரைவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியில் பல கோல்டன் ஜூப்லி படங்களைக் கொடுத்தவர் யாஷ் சோப்ரா. தீவார், சில்சிலா, த்ரிசூல், டாக், சாந்தினி, லம்மே, வீர்ஜரா, தில் தோ பாகல் ஹை என அவரது படங்களின் பட்டியல் பெரிது.
80 வயதாகும் யாஷ் சோப்ரா இப்போது ஷாரூக்கான் நடிப்பில் ஜப் தக் ஹை ஜான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.
இந்தப்படம்தான் தனது இயக்கத்தில் வரும் கடைசி படம் என்றும், இனி ஓய்வெடுக்கப் போவதாகவும் அறிவி்த்துள்ளார்.
அவரது இந்த முடிவு பெரும் சோகம் தருவதாகவும், நடிகர் நடிகைகளுக்கு பெரும் இழப்பு என்றும் பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Post a Comment