சுட்டிக்குழந்தைகளுக்கு ஒரு கூடை கதைகள்!

|

Oru Koodai Kathigal Children

கூட்டுக்குடும்பங்கள் இன்றைக்கு அருகி வருகின்றன. தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு வீட்டில் பெரியவர்கள் சீரியலில் முழ்கிக்கிடப்பதால் குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆளில்லை. இந்த குறையைப் போக்கவே தற்போது மூன் தொலைக்காட்சியில் ‘à®'ரு கூடை கதைகள்' நிகழ்ச்சி à®'ளிபரப்பாகிறது.

குழந்தைகள் தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும், மக்களோடு மக்களாய் பழகவும் உதவும் பாரம்பரியமிக்க கதைகள், கதையின் சாரம்சம் என்னவாக அமைகிறது என்பதையும் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் திருமதி.சுடரொளி, சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் à®'வ்வொரு பள்ளியாக சென்று குழந்தைகளை அமர வைத்து, குழந்தைகளுக்கு தெரிந்த கதையை சொல்லச் சொல்லியும், அந்த கதை எதற்காக சொல்லப்படுகிறது என்பதையும் கூறி குழந்தைகளை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

'à®'ரு கூடை கதைகள்' நிகழ்ச்சி வெள்ளி முதல் ஞாயிறு வரை மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மூன் டிவியில் à®'ளிபரப்பாகிறது. பெற்றொர்களிடமும், குழந்தைகளிடமும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆர்.தாரா முரளி இயக்கியிருக்கிறார்.

 

Post a Comment