டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்தி பட இயக்குனர் யஷ் சோப்ரா நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. அமிதாப் பச்சன், ஷாருக்கான் நடித்த பல்வேறு படங்களை இயக்கியவர் யஷ் சோப்ரா (80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இந்நிலைய¤ல் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.
அவரது உடல் மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டுடியோவில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர்கள் திலீப்குமார், அமிதாப்பச்சன், ஷாருக்கான், அக்ஷய்குமார், நடிகைகள் கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் திரையுலகமே திரண்டு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். யஷ் சோப்ரா உடல் இன்று மதியம் மும்பையில் உள்ள பவன் ஹன்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
'தீவார்', 'கபி கபி', 'த்ரிஷூல்', 'காலா பத்தர்', 'சாந்தினி', 'தில் தோ பாகல் ஹே' உள்பட 22 படங்களை இயக்கியுள்ளார் யஷ் சோப்ரா. கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் Ôஜப் தக் ஹே ஜான்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அவர் இயக்கிய 'தீவார்' என்ற படம்தான் தமிழில் ரஜினி நடிப்பில் Ôதீ' என்ற பெயரில் வெளியானது.
அவரது உடல் மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டுடியோவில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர்கள் திலீப்குமார், அமிதாப்பச்சன், ஷாருக்கான், அக்ஷய்குமார், நடிகைகள் கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் திரையுலகமே திரண்டு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். யஷ் சோப்ரா உடல் இன்று மதியம் மும்பையில் உள்ள பவன் ஹன்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
'தீவார்', 'கபி கபி', 'த்ரிஷூல்', 'காலா பத்தர்', 'சாந்தினி', 'தில் தோ பாகல் ஹே' உள்பட 22 படங்களை இயக்கியுள்ளார் யஷ் சோப்ரா. கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் Ôஜப் தக் ஹே ஜான்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அவர் இயக்கிய 'தீவார்' என்ற படம்தான் தமிழில் ரஜினி நடிப்பில் Ôதீ' என்ற பெயரில் வெளியானது.
Post a Comment