ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் கலக்கியவர் வைஜெயந்திமாலா.
பின்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கியவர், அரசியலில் குதித்தார். 1984-ல் எம்பியானார். யாருக்கும் பிரயோசனம் இல்லாத அளவுக்கு பதவி வகித்து ரிட்டயரானார்.
பின்னர் மகனை ஹீரோவாக்க முயன்று தோற்றார். இப்போது மீண்டும் தானே களத்தில் இறங்கியுள்ளார்.
இந்தியில் தயாராகும் படத்தில் வைஜெயந்திமாலா மீண்டும் நடிக்கிறார்.
இந்த செய்தியை தானே அறிவித்த வைஜெயந்தி மாலா, "சமூக விழிப்புணர்வுப் படம் என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன். செயற்கை சுவாசம் பொருத்திக் கொள்ளும் நோயாளிகளுக்கு இந்தப் படம் உதவும். இப்படத்தை சந்தீப் மாலினி இயக்குகிறார்," என்றார்.
வைஜெயந்திமாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டனவாம்.
Post a Comment