'நான் ஈ' பட இயக்குனர் ராஜ மவுலி இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் டோலிவுட் ஹீரோ பிரபாஸ். தன்னை கொன்றவனை அடுத்தப்பிறவியில் 'ஈ' யாகி பழிவாங்கும் சிம்பிள் கதைதான். ஆனால், அதை எந்த வித 'ஈ'யடிச்சான் காப்பியும் இல்லாமல் சொன்ன விதத்தில் பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் ராஜ மவுலியை நிறைய பெரிய நடிகர்கள் கவனிக்க ஆரம்பிக்க தொடங்கிவிட்டனர். வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாகச் சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜமவுலிக்கு முதலில் ரெட்கார்பெட் வரவேற்பு தான் அளிக்க வேண்டும். இந்த படம் தெலுங்கிலும் செம ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கும் ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க ரொம் ஆர்வம் காட்டி வருகிறாராம். இதற்காக தனது திருமணத்தை தள்ளி வைத்து தன் ஆர்வத்தை காட்டியுள்ளாராம் பிரபாஸ்.
Post a Comment