சசிகுமார் ஜோடியாக நடிக்கவில்லை என்றார் ஹன்சிகா. இது பற்றி அவர் கூறியதாவது: இந்தியில் வெளியான 'டெல்லி பெல்லிÕ என்ற படம்தான் தமிழில் 'சேட்டைÕ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தியில் கவர்ச்சி காட்சிகளும் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அதேபோல் நானும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தி படம் வேண்டுமானால் நெருக்கமான காட்சியால் பரபரப்பாக பேசப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழில் இப்படம் ஒரு காமெடி கதையாகவே உருவாகிறது. இப்போதுள்ள சூழலில் நான் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழில் சசிகுமார் ஜோடியாக நான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது யாரோ கற்பனையாக திரித்துவிட்டிருக்கும் சேதிதான். நிறைய பேர் கதை சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாராவது ஒருவர் தனது படத்தின் பப்ளிசிட்டிக்காக இதுபோல் வதந்தி பரப்புகிறார்கள். சசிகுமாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. இப்போது கை நிறைய படங்களில் நடிக்கிறேன். தற்போது ஹரி இயக்கும் 'சிங்கம் 2Õ படத்தில் பிஸியாக இருக்கிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
தமிழில் சசிகுமார் ஜோடியாக நான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது யாரோ கற்பனையாக திரித்துவிட்டிருக்கும் சேதிதான். நிறைய பேர் கதை சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாராவது ஒருவர் தனது படத்தின் பப்ளிசிட்டிக்காக இதுபோல் வதந்தி பரப்புகிறார்கள். சசிகுமாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. இப்போது கை நிறைய படங்களில் நடிக்கிறேன். தற்போது ஹரி இயக்கும் 'சிங்கம் 2Õ படத்தில் பிஸியாக இருக்கிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
Post a Comment