கனடா: டொராண்டோவில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி (கனடா கிளை) அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து கனடாவில் செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழீழ ஈகர்களின் புனித மாதமான கார்த்திகை மாதத்தில், கனடா நாட்டில் டொரோண்டோ நகரில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் கட்டாயம் புறக்கணிப்போம்.
தமிழர்களுக்கான களியாட்ட காலம் ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்கள் தான் என்பது விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. எல்லாம் இழந்து அனாதையாக்கப்பட்ட வைகாசி (May) மாதம். மற்றும் எங்களின் மானம் காக்க, தம் உயிரை இழந்த மாவீரர்களை நினைவு கூறும் கார்த்திகை (November) தவிர்த்து, மற்ற மாதங்களே களியாட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment