சன் தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி வரும் போரடிக்கும் தொடர்களை மதியநேரத்திற்கு மாற்ற நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்குப் பதிலாக மதியநேரத்தில் இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள தொடர்களை இரவு பிரைம் டைமில் மாற்ற முடிவு செய்துள்ளனராம். சன் டிவி நிர்வாகம் விரைவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட உள்ளதாம்.
நிறுவனத்தின் நிர்வாக மேலாளார்கள் பலரும் மாறிவிட்டதாலே இந்த மாற்றம் என்கிறது சின்னத்திரை வட்டாரம். இதனால் ப்ரைம் டைமில் சீரியலுக்கு ஸ்லாட் பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எந்த நேரத்தில் என்ன அறிவிப்பு வருமோ அதற்கு முன்னதாக டிஆர்பிஐ கூட்ட ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆலோசனை செய்து வருகின்றனராம்.
Post a Comment