'பிறகு' ரிலீசுக்குப் பிறகு நடிக்காமல் இருந்த ரவிச்சந்திரன் மகன் அம்சவர்தன், 4 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சிறந்த படங்களில் நடிக்க காத்திருந்தேன். அதனால்தான் இடைவெளி. இனி இடைவெளி இருக்காது. பாலா உதவியாளர் பிரியன் இயக்கும் 'இருவீட்டார் அழைப்பு' படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இதற்காக உடல் எடை குறைக்கிறேன். மேலும் தாடி, மீசை வளர்த்து வருகிறேன். இப்படம் எனது ரீ-என்ட்ரிக்கு பெரிய உதவி செய்யும். இதை சொந்தமாக தயாரிக்க உள்ளேன். இனி வருடத்துக்கு 2 படங்களில் நடிப்பேன்.
Post a Comment