தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 15ம் தேதி கோலாலம்பூரில் நடக்கிறது.
நூறு படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, இப்போது நேரடி இசைக் கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது 100வது படமான பிரியாணியின் இசையைக் கொண்டாடும் விதத்தில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்த முறை இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்கு KLIMF 2012 என்று பெயர் வைத்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான அரங்கு தயாராகி வருகிறது.
இவ்விழாவில் தனுஷ், கார்த்தி, சிம்பு, ஜீவா, விஷால், ஆர்யா, சினேகா, ஜெயம் ரவி, பிரசன்னா, ஜெய், கிருஷ்ணா உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். பல முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.
இளையராஜா
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், யுவனின் அப்பாவுமான இளையராஜா கலந்துகொள்கிறார்.
Post a Comment