இந்த படத்தில் கருப்பு மேக்கப் போட்டவரும் நடித்திருக்கிறார், சிவப்பு நிற நடிகையும் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்காதது ஏன் என்கின்றனர். அதற்கு காரணம் பத்திரிகைகள்தான். இளையராஜாவை தவிர வேறு இசை அமைப்பாளருடன் நான் பணியாற்றுவதில்லை என்று எழுதுகிறார்கள். அதனால்தான் இம்முறை ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல் எழுதி இருக்கிறார். என் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வரும். எனக்கு குழந்தை பிறந்த பிறகு வன்முறை காட்சிகளை குறைத்துவிட்டேன். இதில் பணியாற்றிய எல்லோருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை. அடுத்த மாதம் 21ம் தேதி படம் ரிலீஸ். இவ்வாறு பாலா கூறினார்.
Post a Comment