இப்படம் எனக்கு திருப்புமுனையாக அமையும். ஜோடியாக நடித்த சுனேனாவும் சிறப்பாக நடித்துள்ளார். 'தேவன் மகளே' பாடல் காட்சியில் சுனேனாவும், நானும் அதிக தடவை முத்தமிட்டு நடிக்க வேண்டியிருந்தது. முதலில் நான் பயந்தேன். பிறகு சுனேனாவும் தைரியமூட்டினார். இதனால் எதிர்பார்த்தபடி அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. மணப்பாடு, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு விஷ்ணு கூறினார்.
Post a Comment