இதுபற்றி நீது சந்திரா கூறியதாவது: பீகார் மாநிலம் பற்றி படங்களில் தவறாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டி இருக்கிறார்கள். பீகாருக்கு இன்னொரு பக்கம் இருப்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அந்த எண்ணத்தை மாற்றும்விதமாக நான் தயாரித்துள்ள படம் இருக்கும். பீகாரிலிருந்து இந்திய சர்வதேச பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் படமும் இதுதான் என்பதில் தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சிதான்.
ஓம்பூரி போன்ற சிறந்த நடிகர்கள் படத்தை பார்த்துவிட்டு, பாராட்டினார்கள். இந்த மாதிரியான ஒரு படத்தை தயாரிக்க துணிச்சல் வேண்டும் என்றார்கள். அதுவே எனக்கு சிறந்த விருதாக இருக்கிறது. நான் நடித்துள்ள ஆங்கில படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து, 'ஆதிபகவன்' படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். 2013 எனக்கு சிறந்த வருடமாக இருக்கும். இவ்வாறு நீது சந்திரா கூறினார்.
Post a Comment