பழம்பெரும் நடிகை மைனாவதி மரணம்

|

Old acress Mayavathi died பழம்பெரும் நடிகை மைனாவதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர் நடிகை பண்டரியின் சகோதரி ஆவார். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக நடித்த `மாலையிட்ட மங்கை' படம் வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தில் இடம் பெற்ற செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பாடலில் மைனாவதி நடனம் ஆடியிருந்தார். இந்த பாட்டும், நடனமும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தது. இப்போதும் இப்பாடல் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களாக மைனாவதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
 

Post a Comment