காமெடியன்கள் கருத்து சொல்லக்கூடாது: சிட்டிபாபு

|

சென்னை : காமெடியன்கள் கருத்துசொன்னால் அதுவும் காமெடியாகிவிடும் என்று சிட்டிபாபு கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சன் டிவியால் உருவாக்கப்பட்டு 'தூள்' படம் மூலம் வளர்ந்தவன். தற்போது மாசானி, மதனகாமராஜா, 'தீயா வேலை செய்யணும் குமாரு' படங்களில் நடித்து வருகிறேன். சின்னத்திரையில் பிசியாக இருந்ததால் அதிக படங்களில் நடிக்கவில்லை. இப்போது முழுக் கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறேன்.

நான் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவன் என்ற நம்பி வருகிறவர்கள் படத்தில் நடிக்கிறேன். எனக்கென்று தனி பாணியை உருவாக்கி இயக்குனரின் நடிகராக நடித்து வருகிறேன். சில படங்களில் என்னை ஏதாவது கருத்து சொல்லுங்கள் என்பார்கள். காமெடியன்கள் கருத்து சொன்னால் அந்த கருத்தும் காமெடியாகி விடும் என்பது என் கருத்து. நமது வேலை சிரிக்க வைப்பது மட்டும்தான். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பது ஆசை.
 

Post a Comment