கமல்தான் சொல்லிக் கொடுத்தார்.. திரிஷா

|

Kamal Is Behind My Dubbing Decision   

நான் சொந்தக் குரலில் பேசுவதையே இப்போதெல்லாம் விரும்புகிறேன். இதற்குக் காரணம் கமல்ஹாசன்தான். அவர்தான் என்னை சொந்தக் குரலில் பேச ஊக்குவித்தார் என்று கூறியுள்ளார் திரிஷா.

திரிஷாவுக்கு நல்ல குரல் வளம்தான், தமிழும் தெரியும்தான், ஆங்கிலத்தையும் கூடவே கலந்து கட்டி அடிப்பார்தான்... ஆனாலும் சொந்தக் குரலில் பேசாமலேயே இத்தனை காலமும் à®"ட்டி வந்தார். ஆனால் தற்போது சொந்தக் குரலில் பேச ஆரம்பித்துள்ளார்.

தோ, சமீபத்தில் கூட சமர் படத்தில் நடித்து முடித்த அவர் அப்படத்திலும் சொந்தக் குரலில்தான் பேசுகிறாராம். இதில் அவர் விஷாலுடன் ஜோடி கட்டியுள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமர் படத்தில் சொந்தக் குரலில் பேசுவது குறித்து அவர் கூறும்போது, நான் சொந்தக்குரலில் சமர் படத்தில் பேசுகிறேன். சந்தோஷமாக இருக்கிற்து. ஆனால் இதற்குக் காரணம் கமல்சார்தான். அவர்தான் சொந்தக் குரலில் பேச என்னை ஊக்கப்படுத்தினார், என்னைத் தயார்படுத்தினார்.

மன்மதன் அம்பு படத்தில் நடித்தபோது,சொந்தக் குரலில் பேசுவது குறித்து அவர் அளித்த பயிற்சி எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது. எப்படி வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார். அதை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் திரிஷா.

கேட்கவே திரில்லாத்தான் இருக்கு திரிஷா...!

 

Post a Comment