கராத்தே மணி மகன் ஹீரோ ஆனார்

|

சென்னை : மறைந்த நடிகர் கராத்தே மணியின் மகன் திரிசூல், 'பிரமுகர்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். விஜயகாந்த் நடித்த 'சுதேசி', அசோக் நடித்த 'வானம் பார்த்த சீமையிலே' படங்களை இயக்கியவர் ஜேப்பி அழகர். அவர் இப்போது 'பிரமுகர்' என்ற படத்தை எழுதி இயக்குகிறார். இதை ஸ்ரீலஷ்மி சண்முகானந்தம் பிலிம்ஸ் மற்றும் வி.ஜே.என்டர்டெயின்மென்ட் மூலமாக மணிகண்டன், சுரேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். புதுமுகங்கள் திரிசூல் கராத்தே மணி, மோகனவேல், கர்ணா, மஞ்வா, ஜெஸ்சி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஹார்முக், இசை, எல்.வி. கணேஷன், பாடல்கள், பழனிபாரதி, மோகன்ராஜன். ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

 

Post a Comment