சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் புதிய மலையாளப் படத்தில் கால்ஷீட்படி வராமல் சனாகான் சொதப்பியதால் நஷ்டமடைந்ததாக இயக்குநர் புலம்பியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை 'கிளைமாக்ஸ்' என்ற பெயரில் மலையாளத்தில் படமாகி வருகிறது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வந்தது. இதுபற்றி பெருமையாக பேட்டியல்லாம் கொடுத்து வந்தார் சனாகான்.
ஆனால் திடீரென படப்பிடிப்புக்கு போகாமல் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டாராம் சனா.
இதனால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை. சனாகானால் ஏகப்பட்ட நஷ்டமாகிவிட்டது என படத்தின் இயக்குநர் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் படத்தை முடித்துக் கொடுக்க சனாகான் வராவிட்டால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தர முடிவு செய்துள்ளாராம் க்ளைமாக்ஸ் இயக்குநர்.
Post a Comment