எழுத்தாளனின் வாழ்க்கை

|

சென்னை : கருணாஸ், ஹரீஷ் கல்யாண், ஸ்வேதா பாசு, இளவரசு உட்பட பலர் நடிக்கும் படம் 'சந்தமாமா'. இதை இயக்கும் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கருணாஸ் எழுத்தாளர். ஹரீஷ் கல்யாண் பாடகர். சேல்ஸ் கேர்ள் ஸ்வேதா பாசு. இவர்கள் மூவரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் பயணத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இதற்காக பல எழுத்தாளர்களை சந்தித்தேன். அவர்கள் சந்தித்த பிரச்னைகளை சொன்னார்கள். அதிலிருந்து தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டேன். இதில் மீரா ஜாஸ்மின் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் ஸ்வேதாவை ஒப்பந்தம் செய்தோம்.


 

Post a Comment