
சென்னை : டிசம்பர் 1,ம் தேதி முதல் 5,ம் தேதி வரை சென்னையில் கூத்து திருவிழா நடக்கிறது. புதுடெல்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியின் சார்பில் 'தெருக்கூத்து பயிலரங்கம்' நடந்து வருகிறது. நாற்பது நாட்கள் நடக்கும் இவ்விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் கூத்து திருவிழா நடக்கிறது. தேசிய நாடகப்பள்ளியும் சென்னை அருங்காட்சியகமும் இணைந்து இத்திருவிழாவை டிசம்பர் 1,ம் தேதி முதல் 5,ம் தேதிவரை நடத்துகிறது. சென்னை மியூசியம் வளாகத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடக்கும் இத்திருவிழாவில், 'இந்திரஜித்', 'அரவான் களப்பலி', 'அர்ஜுனன் தபசு', 'திரவுபதி வஸ்திராபரணம்', 'ராமராவணா' ஆகிய கூத்துகள் நடத்தப்படுகின்றன.
Post a Comment