யானை தந்த வழக்கு: மோகன்லாலைக் காப்பாற்ற அமைச்சர் முயற்சி!

|

Minister Trying Save Mohan Lal Pil

யானைத் தந்த வழக்கில் மோகன்லாலைக் காப்பாற்ற ஒரு கேரள அமைச்சரே முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கேரள சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள 2 யானை தந்தங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த யானை தந்தங்கள் வரவேற்பு அறையில் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த யானை தந்தம் எப்படி வந்தது? என அதிகாரிகள் கேட்டதற்கு சரியான பதிலை மோகன்லால் கூறவில்லையாம்.

இந்நிலையில் மோகன்லாலுக்கு ஆதரவாக கேரள மாநில வன இலாகா அமைச்சர் கணேஷ்குமார் (இவரும் ஒரு நடிகராக இருந்தவர்) அறிக்கை விட்டார்.

மோகன்லாலை காப்பாற்ற அமைச்சர் முயற்சிக்கிறார் என கேரளாவில் குற்றச்சாட்டு எழுந்தது.

கோட்டயம் செப்பு பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் மோகன்லால் வீட்டுக்கு யானை தந்தம் எப்படி வந்தது? என விசாரிக்க வேண்டும் என்று கோரி திருச்சூர் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இந்த மனுவில் அமைச்சர் மோகன்லாலை காப்பாற்ற முயற்சி செய்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த தீர்ப்பு 14-ந் தேதி கூறப்படும் என விஜிலன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மேனன் தெரிவித்தார்.

 

Post a Comment