இது தவிர புதிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காமல் காத்திருப்பில் வைத்திருக்கிறார். இதற்கு காரணம் அவர் தனது கவனத்தை இந்தி படங்களில் திருப்பி இருப்பதுதானாம். 'ஹிம்மத்வாலா படத்தில் அவர் முழுகவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும் ஒரு புதிய இந்த¤ படத்தை அவர் ஏற்றிருப்பதாக தெரிகிறது. இதையடுத்து வரவுள்ள இந்தி பட வாய்ப்புகளை ஏற்கும் வகையில் தென்னிந்திய படங்களை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. அசினைப்போல் தமன்னாவும் தென்னிந்திய படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட்டிலேயே கவனம் செலுத்துவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று தென்னிந்திய படவுலகினர் கூறுகின்றனர்.
Post a Comment