கடல் அனுபவத்தை மறக்க முடியாது

|

kadal  'கடல்' படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்று தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அவர் படத்தில் ஒரு பிரேமில் வந்து விட்டு போனால் கூட அது அழகுதான். அப்படி நினைத்த நேரத்தில் 'கடல்' வாய்ப்பு வந்தது. இதில் அர்ஜுனுடன் நான் நடித்துள்ளேன். அர்ஜுனை ஏற்கனவே தெரியும் என்றாலும் இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்தது இந்தப் படம்தான். படத்தின் கதை என்னவென்று கேட்டால் என்னால் ஒரே ஒரு விஷயம் மட்டுமே சொல்ல முடியும். கதை, கடல் தொடர்பானது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் அந்த அனுபவத்தில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறேன்.நான் தயாரித்து நடித்துள்ள 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. இது எனது கனவு படம். இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு லட்சுமி மஞ்சு கூறினார்.

 

Post a Comment