
சென்னை : சுண்டாட்டம், கேரம் விளையாட்டின் கதையாக இருந்தாலும் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று அருந்ததி கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இது 1980,ல் வட சென்னையில் நடக்கும் கதை. கேரம் விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. கதைப்படி ஹீரோ இர்பானின் தங்கையுடன் நான் படிப்பேன்.
தோழி வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது எங்களுக்குள் காதல் ஏற்படுகிறது. வீட்டில் எதிர்ப்பு வருகிறது. இதைதாண்டி எங்கள் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பது போல கதை செல்லும். இயக்குனர் பிரம்மா.ஜி வித்தியாசமாக படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். இவ்வாறு அருந்ததி கூறினார்.
Post a Comment