துபாயில் கிறிஸ்துமஸ் விழாவை தனது உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் நடிகை நயன்தாரா.
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் டயானா குரியன்.
நாகார்ஜுனா ஜோடியாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படப்பிடிப்பு முடிந்ததும், தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு துபாய் பறந்துவிட்டார் நயன்.
அங்கே தன் அண்ணன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
"நீண்ட நாளைக்குப் பிறகு நான் மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இந்த நாளைக் கொண்டாடுகிறேன். அதுவும் குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது," என்றார்.
இன்று இரவு குடும்பத்தினருடன் மெகா விருந்துக்குத் தயாராகிறாராம் நயன்.
இன்னும் ஐந்து தினங்களில் புத்தாண்டு பிறப்பதால், அந்த நாளையும் குடும்பத்துடன் துபாயிலேயே கொண்டாடப் போகிறாராம்.
Post a Comment