ஆனந்த் என்னையும், என் குடும்பத்தையும் கேவலப்படுத்தினார்: பூஜா காந்தி கண்ணீர்

|

Pooja Gandhi Blames Ex Beau Break Up

பெங்களூர்: தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஆனந்த் கவுடா ஒரு சந்தேகப் பிராணியாக இருப்பதால் அவரைப் பிரிந்துவிட்டதாக கன்னட நடிகை பூஜா காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா காந்திக்கும், பைன்ஸ் தொழில் செய்பவரான ஆனந்த் கவுடாவுக்கும் கடந்த மாதம் 15ம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பூஜா காந்தி கண்ணீர் விட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ஆனந்த் என்னையும், எனது குடும்பத்தாரையும் கேவலமாக நடத்தினார். நாங்கள் பிரிந்ததற்கு அவர் மட்டும் தான் காரணம். அவர் ஒரு சந்தேகப் பிராணி. அவர் என்னை சந்தேகப்பட்டார். இருப்பினும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். அவரால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நிச்சயதார்த்த மோதிரத்தை அவரிடமே கொடுத்துவிட்டேன் என்றார்.

ஆனால் ஆனந்த் கூறுகையில்,

நாங்கள் ஒன்றும் 3 வருடங்களாக காதலிக்கவில்லை. பத்திரிக்கையாளர் ஒருவர் மூலம் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் பார்த்துக் கொண்டோம். அதன் பிறகு அவருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளதை அறிந்து நாங்கள் சில மாதங்களாக பிரிந்திருந்தோம். பின்னர் மீண்டும் சேர்ந்தோம். பூஜாவின் அம்மா தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். அவர் எனது நிறம் மற்றும் உண்ணும் பழக்கம் குறித்து தரக்குறைவாகப் பேசினார். அவருக்கு நாங்கள் ஒன்றாக இருப்பது பிடிக்கவில்லை. ஒரு நடிகையை மணக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தும் காதல் என் கண்ணை மறைத்துவிட்டது. நாங்கள் பிரிந்ததற்கு பூஜா அல்ல அவரது அம்மா தான் காரணம் என்றார்.

 

Post a Comment