சென்னை: காதல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியா சொல்லிக் கொள்ளும்படியாக வாய்ப்புகள் அமையாததால் கேரளாவில் புது பிசினஸ் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு முக்கிய நகரங்களில் பியூட்டி பார்லர் தொடங்கியுள்ளாராம் சந்தியா.
காதல் பட ஹிட் சந்தியாவிற்கு அடுத்தடுத்த படவாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தது. டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, மகேஷ் சரண்யா மற்றும் பலர், தூண்டில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தவிர மலையாளம்,கன்னடம், தெலுங்கு,படங்களிலும் நடித்துள்ளார்.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கு பிறகு தமிழில் சந்தியாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. மலையாளப் படங்களில் மட்டும் சிறு வேடங்கள் வரவே சென்னையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று குடியேறினார் சந்தியா.
இந்த நிலையில் அவத் தனது வருமானத்துக்காக கேரளாவின் முக்கிய நகரங்களில் அழகு நிலையங்களை தொடங்கியுள்ளாராம். நடிகர்-நடிகைகளுக்கு என பிரத்தியேகமான அழகு நிலையங்களை திறந்துள்ள சந்தியா அதை பராமரிக்க தனது தாயாரையே நியமித்துள்ளார். சந்தியாவின் தாயார் ஏற்கனவே பியூட்டி பார்லர் தொழில் நடத்தி வந்தவர் என்பதால் அவரால் எளிதாக இந்த தொழிலை நடத்த முடிகிறது. நல்ல வருமானமும் கிடைக்கிறதாம்.
இயற்கை மூலிகைகளைக் கொண்ட அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் சந்தியாவின் பியூட்டி பார்லருக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது என்கின்றனர். எப்படியோ பட வாய்ப்பு குறைந்தாலும் சொந்த தொழில் கைவிடவில்லை சந்தியாவிற்கு என்கின்றனர் கோலிவுட் பட உலகினர்.
Post a Comment