சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் நேரடியாக வெளியிடுவதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கமல்ஹாசன் ரசிகர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மனித வெடிகுண்டாக வந்து கொல்வோம் என்று கூறுகின்றனர் என்று தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அவர் புகார் கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் வெளியிட நான் எதிர்த்து வருகிறேன். இதற்காக கமல்ஹாசன் ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலிருந்தும் இடைவிடாமல் என்னுடைய செல்போனுக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. மனித வெடிகுண்டாக மாறி வந்து கொல்வோம் என்றும் கமல் ரசிகர்கள் என்னை மிரட்டுகின்றனர்.
என்னை மிரட்டும் ரசிகர்கள் மீதும், அவர்களை தூண்டிய கமல்ஹாசன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜன். மேலும் தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தையும் அவர் போலீஸில் கொடுத்துள்ளாராம்.
Post a Comment