பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் முக்கிய கட்சிகளில் உள்ள கன்னட நடிகைகள் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவதாக தேவ கவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து (ம.ஜ.த) விலகியுள்ள நடிகை பூஜா காந்தி, நாளை எதியூரப்பா கட்சியில் இணைய உள்ளார்.
இந்நிலையில், எடியூரப்பாவின் புதிய கட்சியான, க.ஜ.கவில் (கே.ஜே.பி) இணைய, பூஜா காந்தி முடிவு செய்தார். இதற்காக, எடியூரப்பாவை வெள்ளிக்கிழமையன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். பூஜா காந்தியின் அதிகாரப்பூர்வ இணைப்பு டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று க.ஜ.த. கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் பா.ஜகவில் அதிருப்தியில் உள்ள நடிகைகள் ஸ்ருதி, மாலாஸ்ரீ ஆகியோரும், கே.ஜே.பியில் இணைய நேரம் பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment