ஜெயம் பட வில்லனும் பிரபல தெலுங்கு ஹீரோவுமான கோபிசந்துக்கு மீண்டும் திருமணம் நிச்சயமாகிறது.
நாளை ஹைதராபாதில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ள கோபிசந்துக்கு ஏற்கனவே திருமணம் முடிவானது. ஹரிதா என்ற பெண்ணுடன் கோபிசந்துக்கு நிச்சயம் நடந்தது. திருமண தேதியும் முடிவானது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திருமணம் ரத்தானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது மீண்டும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணுடன் கோபிசந்துக்கு திருமணம் முடிவாகியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்தின் உறவினர்தான் இந்த ரேஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது.
கோபிசந்த - ரேஷ்மா திருமண நிச்சயதார்த்தம் நாளை டிசம்பர் 21-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது.
வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபிசந்த் தற்போது டாப்ஸியுடன் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.
Post a Comment