வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட விஷாலின் சமர் படம் தள்ளிப் போய்விட்டது.
பொங்கலுக்கு இந்தப் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளர்கள் நிதிப் பிரச்சினையில் சிக்கியிருப்பதால் இந்த ஒத்தி வைப்பு என்று கூறப்படுகிறது. இரண்டு வார கெடுவுக்குள் சிக்கலைச் சமாளித்து வெளியிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்படி அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த ஒத்தி வைப்பால் விஷாலின் இன்னொரு படமான மத கஜ ராஜாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் மதகஜ ராஜாவை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார் சுந்தர் சி.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் சமரும் மத கஜ ராஜாவும் வெளியானால் இருபடங்களுமே அடிவாங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மதகஜ ராஜாவை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது.
Post a Comment