'எண்டே'...பலான தொழில் குறித்து மலையாளத்தில் ஒரு படம்!

|

Real Life Sex Trafficking Story On Film

டெல்லி: மலையாளத்தில் ஒரு படம் உருவாகியுள்ளது. பலான தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் குறித்த படம் இது.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்கும் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டிருப்பவர் பெங்களூரைச் சேர்ந்த சுனிதா கிருஷ்ணன். இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களை இவர் மீட்டுள்ளார். இவர் குறித்த கதைதான் எண்டே.

மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் சுனிதா கிருஷ்ணனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. செக்ஸ் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் கொடுமை, அவலம் குறி்த்து விவரிக்கிறது.

இப்படத்தில் மராத்தி நடிகை அஞ்சலி படேல் நாயகி பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறதாம்.

 

Post a Comment