சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது கண்ணா லட்டு திங்க ஆசையா திரைப்படம். சந்தானம், பவர்ஸ்டார் ஆகியோரின் நகைச்சுவையில் படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறதாம்.
ஒரு நாளைக்கு மூணு வேளை 'கண்ணா லட்டு திங்க ஆசையா' பார்த்தால் டென்சன் ஓடிப்போய்விடும் என்று படம் பார்த்தவர்களே விளம்பரம் செய்கின்றனராம். இது இப்படி இருக்க இந்த படத்தை பார்த்துவிட்டு பாதியில் எழுந்து ஓடியிருக்கிறார் இயக்குநர் கெளதம்மேனன். சொல்லப் போனால் இந்தப் படத்தில் அவர் சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறார் என்பதுதான் அச்சம்.
கடந்த சில தினங்களுக்கு முன் சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தை காண வந்தார் கெளதம் மேனன். பின் வரிசையின் கடைசி சீட்டில் உட்கார்ந்திருந்த அவருக்கு படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே மக்களின் உற்சாகமும் கைதட்டல்களும் காதை பிளந்துவிட்டது போல. இடைவேளைக்குப் பிறகு ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார்.
இத்தனைக்கும் இவர் நடித்த பகுதி இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறது. அதைக் கூட காண பொறுமையில்லாமல் ஓடிவிட்டார் மனிதர். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
அவரின் சமீபத்திய படமான நீதானே என் பொன் வசந்தம் சரியாக போகாத கடுப்பில், பவர் ஸ்டாருக்கு மக்கள் கொடுத்த கைத்தட்டலை ரசிக்க முடியாமல் போய்விட்டாரோ என்னவோ?
+ comments + 1 comments
dont try to hurt POWER STAR,
BY POWER SOAP
Post a Comment