நடுநிலையுடன் பாரதிராஜா சிந்தித்துப் பார்க்க வேண்டும்- தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

|

Tntj Comments On Bharathiraja Opinion On Viswaroopam

சென்னை: தங்க ஊசி என்பதற்காக அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா.. எனவே விஸ்வரூபம் படம் தொடர்பாக நடுநிலையுடன் இயக்குநர் பாரதிராஜா பேச வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் சையத் இக்பால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் படம் தொழில்நுட்பத்திலும், கதை சொல்லும் விதத்திலும் சிறப்பாக இருப்பதால் அதனை வெளியிட வேண்டும் என்று பாரதிராஜா சொல்கிறார். கமல் திறமையான கலைஞர் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதே நேரத்தில் தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?

காவல்துறையும், அரசையும்விட முஸ்லிம்களை தவறாக அடையாளப்படுத்திப் பார்த்தவர்கள் திரைத்துறையினர்தான். கமல் என்கிற தனிமனிதன் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் தயாரித்திருக்கின்ற படத்தின் காட்சி அமைப்புகளும், கதை சொல்லும் பாணியும்தான் எங்களை அவருக்கு எதிராக அணி திரள வைத்திருக்கிறது. பாரதிராஜா அவர்களே நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

Post a Comment