சென்னை: விஸ்வரூபம் படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதாக சில தியேட்டர் உரிமையாளர் சங்கங்கள் மீது கமல் ஹாசன் போட்டி கமிஷனிடம் புகார் கொடுத்துள்ளார்.
கமல் ஹாசன் தானே இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை வரும் 10ம் தேதி டிடிஹெச்சில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஒரு வழியாக தியேட்டரில் படத்தை வெளியிடுவது என்று கமல் முடிவு செய்தார்.
படம் வரும் 25ம் தேதி 500 திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் தனது படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதாக சில தியேட்டர் உரிமையாளர் சங்கங்களுக்கு எதிராக சட்டரீதியான வர்த்தகப் போட்டியை தடுக்கும் முறைகேடுகளை விசாரிக்கும் ஒழுங்குமுறை ஆணையமான இந்திய போட்டி கமிஷனில்(காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா) கமல் புகார் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து போட்டி கமிஷனின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விஸ்வரூபம் தொடர்பாக கமலிடம் இருந்து புகார் மனு கிடைத்துள்ளது. இது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்றார்.
Post a Comment