சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.
மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.
+ comments + 1 comments
good
Post a Comment