சென்னை: பெரும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ள கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று சென்னை பிரசாத் லேபில் நீதிபதிகளுக்கு திரையிடப்பட்டது.
விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய சமூகத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை தடை செய்யக் கோரினர். அதை ஏற்று, இரண்டு வாரங்கள் படத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு.
இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் கமல். தமிழக அரசின் தடைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, நாளை மறுதினம் வரை தடை தொடரும் என அறிவித்துவிட்டார். மேலும் படத்தைப் பார்த்த பிறகுதான் தடையை விலக்குவதா இல்லையா என முடிவு செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.
அதன்படி இன்று நீதிபதி வெங்கட்ராமன் மற்றும் பிற நீதிபதிகளுக்கு இந்தப் படம் சென்னை பிரசாத் லேபில் திரையிடப்பட்டுள்ளது.
படம் பார்த்த பிறகு, தடையை நீக்குவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதால் அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Post a Comment