சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா சீரியஸாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
விஸ்வரூபத்துக்கு பிரச்னை என்று தெரிந்ததும் கொதித்துப் போய் அறிக்கை விட்டேன். போன வாரம்தான் மதுரையில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தோட இசை வெளியீடு இருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் என்னோட மனசில இல்ல. வலிதான் இருக்கும். விஸ்வரூபத்தை வச்சு இங்க நடந்துட்டு இருக்கிற பார்க்கும்போது மனசில ஏற்படற வலி.
உன்னதமான அந்த கலைஞனை எதுக்குப் போய் இப்படி புண்படுத்துறீங்க.... டி.ராஜேந்தர், விஜயகாந்த் ஆகியோர் கட்சி ஆரம்பிச்சபோது அவங்கள திட்டுனேன். ஆனால் அவங்களும் இதுபோன்ற வலியில் சிக்கித்தான் கட்சி ஆரம்பிச்சு இருப்பாங்களோன்னு தோணுது.
இதுவரை கமல்கிட்டப் பேசல. அரசியல் பாதையில் கமலையும் இறக்கி விட்டுராதீங்க. அவர் அரசியலுக்கு வந்தால் உங்களால தாங்க முடியாது. அப்படி அவர் அரசியலுக்கு வந்தா முழுசா எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் வருவார்," என்றார் பாரதிராஜா.
Post a Comment