பூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்!

|

Death Threat Pooja Bhatt

மும்பை: தனக்கு சிலர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை மற்றும் இயக்குநர் பூஜா பட். இவருக்கு நேற்று முன்தினம் செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம ஆசாமி யார் என்று தெரியவில்லை.

மிரட்டலால் பூஜாபட் அதிர்ச்சியாகியுள்ளார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மிரட்டியவரின் செல்போன் நம்பரையும் போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.

இது குறித்து பூஜாபட் கூறுகையில், "செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாகவும் ஆபாசமாகவும் என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டித் தீர்த்த பிறகு போனைத் துண்டித்து விட்டான். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

மகள் பூஜா பட்டுக்கு இந்த மாதிரி மிரட்டல் வந்திருப்பது கவலை அளிப்பதாக அவரது தந்தை இயக்குநர் மகேஷ் பட் தெரிவித்தார்.

 

Post a Comment