விஸ்வரூபத்திற்கு தடைவிதித்தது நியாயமல்ல: ஆமீர் கான்

|

Aamir Khan Disapproves Ban On Vishwaroopam

மும்பை: விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது நியாயம் அன்று என்று பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கையை புண்புடுத்தும் வகையில் காட்சி இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசும் படத்திற்கு தடை விதித்தது. இதற்கிடையே விஸ்வரூபத்திற்கு தடை விதித்ததை கண்டித்தும், கமலுக்கு ஆதரவு தெரிவித்தும் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் விஸ்வரூபம் மீதான தடை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சென்சார் போர்டு பட்ததைப் பார்த்து அதை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்த பிறகு விஸ்வரூபத்திற்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும். இது ஜனநாயக நாடு. விஸ்வரூபத்திற்கு தடை விதித்திருப்பது நியாயம் இல்லை என்றார்.

 

Post a Comment