பரதேசி வரும் தேதி மார்ச் 15... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

|

Bala S Paradesi From March 15   

பாலா படங்களில் பெஸ்ட் இதுதான் என பலரும் பாராட்டி வரும் பரதேசி படம் வரும் மார்ச் 15-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தேதிகளை யூகமாகக் கூறி வந்த பாலாவும் அவரது குழுவினரும் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பரதேசி படத்தை முதலில் பிவிபி நிறுவனம் தயாரித்தது. ஆனால் பட்ஜெட் எகிறியதால் பாலாவே, பி ஸ்டுடியோஸ் எனும் பேனரில் தயாரிக்கிறார்.

ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மறைந்த முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் ரெட் டீ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 1930களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மணிரத்னம், அனுராக் காஷ்யப் போன்றவர்கள் படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குநர் பாலா.

இதனால் பட வெளியீட்டை தள்ளி வைத்திருந்தார். இப்போது வரும் மார்ச் 15-ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார் பாலா.

படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார்.

 

Post a Comment