ராணா பற்றிய தனது கமெண்டுகளுக்கு விக்ரமும், விக்ரம் பற்றி தான் கூறியவற்றுக்கு ராணாவும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தெலுங்கு நடிகர் ராணா தன் சொந்த மொழியில் காலூன்றுவதை விட்டுவிட்டு இந்திக்கு வந்துவிட்டார். இதனால் அவர் தெலுங்கில் அவர் ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அவரைப் போல என்னால் தமிழை விட்டு விட்டு இந்திக்கு வரமுடியாது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராணா, விக்ரம் தன் வேலையைப் பார்த்தால் போதும். பத்து தோல்விப் படங்களைக் கொடுத்த அவர் என்னைப் பற்றி பேசியிருப்பது தேவையற்றது, என்றார்.
இந்த நிலையில் இன்று இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ராணாவைப் பற்றி தான் பேசியது தவறுதான். அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என விக்ரமும், விக்ரம் பற்றி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக ராணாவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment