பாலாவின் பெருமைக்குரிய படமாக வரும் பரதேசி, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் போகிறது.
இந்தப் படத்தை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடுவதாக முதலில் கூறியிருந்தனர். பின்னர் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போடப்பட்டது.
ஆனால் இப்போது பரதேசி படம் கேன்ஸ் விழாவுக்கு அனுப்பபடுகிறது. இதனால் படம் வெளியாகும் தேதி குறித்து பாலா எதையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.
இந்தப் படத்தை கேன்ஸில் பிரிமியர் காட்சியாக திரையிட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் அதர்வா நாயகனாகவும், வேதிகா - தன்ஷிகா நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.
பாலை படங்களிலேயே 90 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது என்ற பெருமை பரதேசிக்கு உண்டு.
Post a Comment