பாலாவின் பரதேசி படத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிய ஆரம்பித்துள்ளன.
இந்தப் படத்தில் நூறாண்டுகளுக்கு முந்தைய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இருண்ட வாழ்க்கையை படம்பிடித்துள்ளாராம் பாலா.
ரெட் டீ (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள பரதேசியில், முரளி மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர்.
பொதுவாக ஒரு படத்தை முடிக்க ஆண்டுக்கணக்கில் எடுத்துக் கொள்ளும் பாலா, இந்தப் படத்தை மாதக்கணக்கிலேயே முடித்துவிட்டிருக்கிறார். பாலா எடுத்த படங்களில் குறுகிய காலத்தில் உருவான படம் என்ற பெயர் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.
இந்தப் படம் முடிந்து, பிப்ரவரி 15-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சிலர் 22-ம் தேதிதான் வெளியாகும் என்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் உறுதியாக எதையும் கூறவில்லை.
இந்த நிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகளை முக்கிய இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டி வருகிறார் பாலா.
படம் பார்த்த பாலாவின் குரு பாலு மகேந்திரா, பாலாவின் ஆகச் சிறந்த படைப்பு இதுவே என்று பாராட்டியுள்ளார். அப்ப விருது நிச்சயம் என திரையுலகம் பேச ஆரம்பித்துள்ளது.
பரதேசி பார்த்த இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப், "பாலாவின் படம் பரதேசி பார்த்தேன். நெகிழ்ந்துவிட்டன். அவரது பெஸ்ட் படம் இது," என்று பாராட்டியுள்ளார்.
Post a Comment