சினிமா படப்பிடிப்புத் தளத்தில் பிறக்கும் ஒரு பெண்ணின் கதையை மையப்படுத்தி உருவான தொடர் பாலிமர் டிவியில் பிப்ரவரி 18 முதல் தொடங்க உள்ளது.
இன்றைய சினிமா நூற்றாண்டுகால வரலாற்றினை உடையது. இதனை நினைவு கூறும் விதமாக கலர்ஸ் டிவியில் மதுபாலா என்ற டிவி தொடர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மக்களின் அதிக வரவேற்பினை பெற்ற இந்த தொடர் பாலிமர் டிவி மூலம் தமிழ் பேச வருகிறது.
சினிமா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த அழகான குழந்தை மதுபாலா. அவள் வளர வளர சினிமா பற்றி ஒரு அச்சம்தான் உருவாகிறது. அவளது கனவுகள் வேறு. கவர்ச்சிகரமான திரை உலகில் இருக்க அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அங்குதான் இருந்தாகவேண்டும் என்ற நிர்பந்தம்.
மதுபாலாவிற்கு ஒவ்வொன்றுமே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் திரை உலகம் அவளை ஆச்சரியமாக பார்க்கிறது. நடுத்தர வர்க்க பெண்ணின் ஆசைகளை - மதிப்பீடுகளை சினிமா படப்பிடிப்புத் தள பின்னணியில் விளக்குகிறது மதுபாலா கதை.
பாலிமர் தொலைக்காட்சியில் பிப்ரவரி 18 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 6.30 மணிக்கு மதுபாலா தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
Post a Comment