திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம்

|

சென்னை: திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை வியாசர்பாடி கண்ணதாசன் நகரில் எண்ணம் அறக்கட்டளையும், எழுத்தேணி அறக்கட்டளையும் தமிழ் எழுச்சிப் பேரவையுடன் இணைந்து முப்பெரும் விழா நடத்தின.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநரும், பாடல் ஆசிரியரும், நடிகருமான யார் கண்ணன் அவர்களுக்கு தமிழ் கலைக் காவலர் என்ற பட்டமும், தமிழகத் துறைமுகங்கள் பற்றியும் தமிழரின் கடலியல் பற்றியும் ஆய்வு நடத்தி வரும் ஒரிசா பாலசுப்பிரமணியன், தமிழக வரலாற்றுச் செய்திகளை தம் நாட்காட்டியில் வெளியிட்டுள்ள பூர்விகா நிறுவனத்தின் வடிவமைப்பாளர் துரை குமார், தமிழக நாட்டு மாடுகளைப் பாதுகாத்து வரும் கோவை வட வள்ளி சண்முகம், தமிழக நெல்விதைகளைப் பாதுகாத்து வரும் திருத்துறைப்பூண்டி செயராமன் ஆகியோர் தமிழ் மரபுக் காவலர் பட்டமும் நினைவுப் பரிசும் வழங்கிப் பாராட்டப் பெற்றனர்.

கவிஞர் பன்னீர் செல்வன், கவிஞர் மறத்தமிழ்வேந்தன், திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் செல்லன், கல்லூரி கல்வித்துறைத் துணை இயக்குநர் அ.மதிவாணன், முனைவர் இறையரசன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

 

Post a Comment