கடல் பட நாயகனுக்கு முதல் படமே ஊத்திக் கொண்டதில் ஏக வருத்தம். ஆனால் அப்படி இருந்துவிட்டால் என்னாவது...
வருவதில் நல்லதைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் அட்வைஸ் செய்வதால், கதைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.
ஆனால் இப்படி கதை கேட்கும்போது, அப்பா நடிகர் குறுக்கே வருவதே இல்லையாம். தன் தலையீடு வருகிறவர்களை விரட்டியடித்துவிடும் என்பதைப் புரிந்தவர் அல்லவா...
ஆனால் கதை கேட்ட பிறகு, மகனிடம் அவர் தவறாமல் சொல்வது, என்னைப் போல மட்டும் இருந்துடாதே என்பதுதானாம்.
"நான் பீக்ல இருந்த காலத்துல இஷ்டத்துக்கும் இருந்துட்டேன். கூத்தடிச்சேன். இவ்வளவு சம்பளம் வேணும்னு கேட்காமல் நடிச்சேன். பலர் எனக்கு பாக்கி கொடுக்கவே இல்ல. நானும் என் இஷ்டத்துக்குதான் ஷூட்டிங் போவேன். ஒரு நாள் கூட சொன்ன டயமுக்கு போனதில்லை. நீயும் அப்படி இருந்துடாதே.. பார்த்து பிக்கப் பண்ணிக்கோ... பொண்ணுங்க விஷயத்துலயும் கேர்ஃபுல்லா இருந்துக்க," என்கிறாராம்.
ம்ம்.. தனக்குன்னு வரும்போதுதான் எல்லார் கஷ்டமும் புரியுது!!
Post a Comment